குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Wednesday, April 2, 2008

இன்று ஏன் புதிதாய்?


நீ கடிகாரம் தொலைத்த பொழுது
நிமிடத்திற்கு நான்கு முறை
என் பேர் சொல்லி அழைத்து,
நேரம் கேட்டதால்...

புதிதாய் வாங்கிய உன் பெயர் போட்ட கடிகாரத்தை
‘இருக்கட்டும் இது!’ என்று ஒளித்து வைத்தேன்.

உனக்காக;

நீ பசியாய் வந்த பொழுது
தண்ணீர்க்குவளையும் உப்புத்தூவியும்
என் பேர் சொல்லி அழைத்து,
வேண்டும் என்றதால்...

புதிதாய் வாங்கிய உன் பெயர் போட்ட இரண்டையும்
‘காணோமே அது!’ என்று ஒளித்து வைத்தேன்.

உனக்காக;

நீ பிரச்சனையோடு வந்த பொழுது
முழுதாய் ஒரு நிமிடம் பார்ப்பாய்
என் பேர் சொல்லி அழைத்து,
என்முகம் என்பதனால்...

புதிதாய் வந்த இழப்பையும் கண்ணீரையும்
‘சரி போகட்டும் அது!’ என்று ஒளித்து வைத்தேன்.

உனக்காக;

நீ (உன்) தாய் தந்தையோடு வந்த பொழுது
பேச்சுவார்த்தை முற்றிய பிறகும்
என் பேர் சொல்லி அழைத்து,
என்னைத் திட்டாமல் விட்டதனால்...

புதிது புதிதாய், உன் பெயர் போட்டு வந்த சண்டைகளையும்
‘சாவி போட்டே இருக்கட்டும்’ என்று ஒளித்து வைத்தேன்.

உனக்காக;

இப்படி ஒளித்துவைத்து ஒளித்துவைத்து
உன்னைக் காதலித்ததால் தான்
அப்படி என்ன செய்துவிட்டாய் ‘எனக்காக?’, என்று
என் பேர் சொல்லி அழைத்து...

புதிதாய் ஒருவலி தந்தாயே இன்று;
‘அதுவும் இருக்கட்டும்’ என்று ஒளித்து வைக்கவா?

உனக்காக.

ஒலிக்கும்... ...

9 Comments:

நிஜமா நல்லவன் said...

///புதிதாய் ஒருவலி தந்தாயே இன்று;
‘அதுவும் இருக்கட்டும்’ என்று ஒளித்து வைக்கவா?///

:(

Aruna said...

A very nice poem with touchy words!
anbudan aruna

NewBee said...

//
நிஜமா நல்லவன் said...
///புதிதாய் ஒருவலி தந்தாயே இன்று;
‘அதுவும் இருக்கட்டும்’ என்று ஒளித்து வைக்கவா?///

:(
//

எனக்கும் அப்படித்தான் இருந்தது

'உனக்காக.' என்றபோது
:-) என்று இருந்தது...

வருகைக்கு நன்றி! 'நிஜமா நல்லவன்' :)

NewBee said...

// aruna said...
A very nice poem with touchy words!
anbudan aruna//

வருகைக்கும் அன்பிற்கும் நன்றி! அருணா.

cheena (சீனா) said...

புது வண்டே !

கவிதை எழுத ஆரம்பித்து விட்டாயா ??

இருக்கட்டும் வழக்கம் போல் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது

ம்ம்ம்ம்ம்ம்

நடை அழகு - நல் வாழ்த்துகள்

அன்புடன் சீனா !!

goma said...

பதிவைப் பார்த்தால் புது வண்டு போலத் தெரியவில்லையே....

NewBee said...

வருகைக்கு நன்றி! goma... :-)

இன்னும் வளரனும், நிறையப் படிக்கணும்.. அதுனால, எப்பவுமே புதுசு தானே..

கருப்பன் (A) Sundar said...

ரீங்காரம் இனிமையாக இருக்கிறது! தொடருங்கள்.

NewBee said...

நன்றி! கருப்பன்...:-)

வருகைக்கும் வாழ்த்துக்கும்...

blogger templates 3 columns | Make Money Online